''எழுத்தாளன் இரண்டு ஆளாக இருக்கவேண்டும் (Dichotomy). முதலில் எழுத்தாளனாக;பிறகு, தான் எழுதியதைத்தானே படித்துப் பார்க்கும் போது வாசகனாக! உன் எழுத்து உனக்கே போரடித்தால் வாசகன் எப்படி அதை ரசிப்பான்?"
சம்பளம்
-1ஆம் தேதி சம்பளம் முக்கியம். வேலை முக்கியம். வேலை போக மற்ற நேரத்தில் கதை கட்டுரை எழுதலாம். என்னையே எடுத்துக்கொள் நான் வேலை பார்த்துக்கொண்டு தான் கதை எழுதினேன். முழு நேரமும் எழுதினால் குடும்பம் நடத்த முடியாது. ஒரு முறை சுஜாதவிடம் பேசிக்கொண்டு இருந்த போது அவர் எனக்கு கொடுத்த அறிவுரை.
Sujatha's Wall Paper
Desikan 1994ல் வரைந்தது. இந்த படம் சுஜாதாவின் கம்ப்யூட்டரில் கடைசிவரை Wall Paper ஆக இருந்தது. ஏதாவது ரிப்பேர் என்றால் முதலில் அவர் “இந்த வால் பேப்பர் மட்டும் மாத்தாதீங்க. அது அப்படியே இருக்கட்டும்” என்பார்.
சுஜாதா பற்றி பாலகுமாரன்….
அப்பொழுது தமிழில் கவிதையில் இருக்கும் அளவுக்கு கதையில் எனக்கு ஆளுமை இல்லை. இப்பொழுது சோழா ஷெரட்டன் ஹோட்டல் இருக்குமிடத்தில் முன்பு ஒரு திருமண மண்டபம் இருந்தது. அந்த திருமண மண்டபத்தில் தினமணி கதிர் பத்திரிகையின் சார்பாக, அதன் ஆசிரியராக இருந்த திரு. சாவி அவர்கள் எழுத்தாளர் சுஜாதாவை சென்னை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
புளியோதரை
ரெஃப்ரிஜிரேட்டர் கண்டு பிடிக்கும் முன்பே தமிழன் “வச்சு வச்சு” சாப்பிட்டது புளி சாதத்தைத் தான்.! ஒரு வாரம் ஆனாலும் கெடாது.! அக்காலத்தில் வெளியூர் பயணங்களில் நம் கால்களே டாக்சியாக இருந்த காலத்தில் நம் பாட்டன்களின் பசியைப் போக்கிய வழிச் சோறு என்பது புளிச் சோறே! என்பது 100% உண்மை.!
பணம்
பணம் என்பது எனக்கு வெவ்வேறு பிராயத்தில் வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டிருந்தது.
பள்ளியில் படிக்கும்போது மத்தியானம் சாப்பிட வீடு திரும்பிவிடுவதால், பாட்டி கண்ணில் காசைக் காட்டமாட்டாள்.
எப்போதாவது இரண்டணா கொடுத்து ‘பப்பரமுட்டு’ வாங்கிச் சாப்பிடு என்று தருவாள்.
இரண்டணா ஒரு இரண்டுங்கெட்டான் நாணயம்.
ரங்கராஜா கொட்டகையில் சினிமா தரை டிக்கெட் வாங்கலாம். பிரச்சனை, வெளியே வரும்போது சட்டையெல்லாம் பீடி நாற்றம் அடிக்கும். பாட்டி கண்டு பிடித்துவிடுவாள்.
பாட்டிக்கு ஜனோபகார நிதி என்று ஒரு வங்கியில் கொஞ்சம் குத்தகைப் பணம் இருந்தது. அதிலிருந்து எப்போதாவது எடுத்து வரச்சொல்வாள். 25 ரூபாய்.
நடுங்கும் விரல்களில் இருபத்தைந்து தடவையாவது எண்ணித்தான் தருவார்கள்.
பாங்கையே கொள்ளையடிக்க வந்தவனைப்போல என்னைப் பார்ப்பார்கள்.
திருச்சி செயிண்ட் ஜோசப் காலேஜில் படித்தபோது, ஸ்ரீரங்கத்திலிருந்து திருச்சி டவுனுக்கு மூணு மாசத்துக்கு மஞ்சள் பாஸ் ஒன்று வாங்கித் தந்துவிடுவாள்.
லால்குடி பாசஞ்சரில் பயணம் செய்து கல்லூரிக்குப் போவேன்.
மத்யானம் ஓட்டலில் சாப்பிட இரண்டணா கொடுப்பாள்.
பெனின்சுலர் ஓட்டலில் ஒரு தோசை இரண்டணா. சில நாள் தோசையத் துறந்து விட்டு இந்தியா காப்பி ஹவுசில் ஒரு காப்பி சாப்பிடுவேன்.
ஐஸ்க்ரீம் எல்லாம் கனவில்தான்.
எம்.ஐ.டி படிக்கும் போது அப்பா ஆஸ்டல் மெஸ் பில் கட்டிவிட்டு என் சோப்பு சீப்பு செலவுக்கு 25 ரூபாய் அனுப்புவார்.
பங்க் ஐயர் கடையிலும் க்ரோம்பேட்டை ஸ்டேஷன் கடையிலும் எப்போதும் கடன்தான். எப்போது அதைத் தீர்த்தேன் என்று ஞாபகமில்ல.
இன்ஜினீயரிங் படிப்பு முடிந்து ஆல் இண்டியா ரேடியோவில் ட்ரெய்னிங்கின்போது ஸ்டைப்பெண்டாக ரூ.150 கிடைத்தது.
ஆகா கனவு போல உணர்ந்தேன். அத்தனை பணத்தை அதுவரை பார்த்ததே இல்லை.
சவுத் இண்டியா போர்டிங் அவுசில் சாப்பாட்டுச் செலவு ரூ.75. பாக்கி 75_ஐ என்ன செய்வது என்று திணறினேன்.
உல்லன் ஸ்வெட்டர், ஏகப்பட்ட புத்தகங்கள் என்று வாங்கித் தள்ளினோம்.
மாசக் கடைசியில் ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் மிச்சமிருந்தது.
அதன்பின் வேலை கிடைத்தது.
1959_ல் சென்ட்ரல் கவர்மெண்டில் ரூ.275 சம்பளம்.
அப்பாவுக்கு ஒரு டிரான்சிஸ்டர் வாங்கிக் கொடுத்தேன். அம்மா எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டாள்.
ஒரு மாண்டலின் வாங்கி ராப்பகலாக சாதகம் பண்ணினேன்.
வீட்டுக்குள் ஆம்பிளிஃபயர், ரிகார்ட் ப்ளேயர் எல்லாம் வைத்து அலற வைத்தேன். எல்லாவற்றையும் அம்மா சகித்துக் கொண்டிருந்தாள்.
பி.எஸ்சி., பரீட்சை எழுதி டில்லிக்கு டெக்னிக்கல் ஆபீசராக வந்துவிட்டேன்.
சம்பளம்? மயங்கிவிடாதீர்கள் ரூ.400!
முதன்முதலாக ஐ.ஓ.பி.யில் என் பெயரில் ஒரு அக்கவுண்ட், சகட்டு மேனிக்கு புத்தகங்கள், வெஸ்பா ஸ்கூட்டர் அலாட்மெண்ட் ஆன போது உலகத்தின் உச்சியைத் தொட்டமாதிரி இருந்தது.
அடுத்தபடி பாரத் எலக்ட்ரானிக்ஸில் டெபுட்டி மேனேஜராகச் சேர்ந்தபோது சம்பளம் முதல் முதலாக நான்கு இலக்கத்தைத் தொட்டது.
பங்களூருக்கு இடமாற்றம். செகண்ட் ஹாண்டில் கருப்பு அம்பாஸடர் கார்; திருமணம்.
என்னிடம் ஒரு பழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. ஒரு அளவுக்கு மேல் பணம் சேர்க்க மாட்டேன்,
சேராது.
எப்போதும், தேவைக்குச் சற்றே சற்று குறைவாகவே பணம் இருக்கும். இதில் ஒரு பரவசம் இருக்கிறது.
யாராவது வந்து பெரிசாக எதிர்பார்த்து கடன் கேட்டால் வேஷ்டியை அவிழ்த்து ஸாரி, பாங்க் புத்தகத்தைத் திறந்து காட்டிவிடலாம்.
ஒரு சிறிய அறிவுரை, அதிகப் பணம் சேர்க்காதீர்கள். இம்சை, தொந்தரவு...
இன்று பலபேருக்கு என்னிடம் சந்தேகம். சினிமாவுக்கு எல்லாம் கதை எழுதி வருகிறாய், அவர்கள் இரண்டு கைகளிலும் தாராளமாய் பணம் கொடுப்பார்கள். புத்தகங்களிலிருந்தும் பத்திரிகை களிலிருந்தும் ராயல்டி வரும். இத்தனை பணத்தை வைத்துக் கொண்டு என்னதான் செய்கிறாய்?
என் அனுபவத்தில் ஓரளவுக்கு மேல் பணம் சேர்ந்து விட்டால், ஒரு பெரிய செலவு வந்தே தீரும்.
இது இயற்கை நியதி.
அந்தச் செலவு வைத்தியச் செலவாக இருக்கும் அல்லது வீடு, கார் ஏதாவது வாங்கினதுக்கு வங்கிக்கடனாக இருக்கும்.
இதிலிருந்து முக்கியமாக நான் கண்டுகொண்டது,
செலவு செய்தால்தான் மேற்கொண்டு பணம் வருகிறது என்பதே.
இன்று பலருக்கு என் பண மதிப்பைப் பற்றிய மிகையான எண்ணங்கள் இருக்கலாம். உண்மை நிலை இதுதான்.
இன்றைய தேதிக்கு கடன் எதுவும் இல்லை. என்னிடம் இருக்கும் பணத்தில் குற்றநிழல் எதுவும் கிடையாது.
ராத்திரி படுத்தால் பத்து நிமிஷத்தில் தூக்கம் வந்து விடுகிறது.
எகனாமிஸ்ட்டுகள் என்ன என்னவோ கணக்குகள் போட்டு ஜிஎன்பி, ஜிடிபி என்றெல்லாம் புள்ளிவிவரம் தரலாம்.
நான் தரும் எளிய புள்ளி விவரம் இது.
ஒரு ரூபாய், அதன் வாங்கும் மதிப்பு கவனித்தால் உங்களுக்கு இந்தியப் பொருளாதாரம் சட்டென்று புரிந்துவிடும்.
இந்த வாங்கும் மதிப்பு காலப்போக்கில் குறைந்து கொண்டே வந்திருக்கிறது.
முன்பெல்லாம் ஒரு ரூபாய் ஒரு வாரம் வரை தங்கியது.
இன்று ஒரு மணிநேரம்கூட, சிலசமயம் ஒரு நிமிஷம் கூட தங்குவதில்லை.
யோசித்துப் பாருங்கள்.
சுஜாதா அவர்கள் எழுதிய அனுமதி சிறுகதை
"என்ன பாலாஜி எப்படி இருந்தது பேப்பர்?"
அவர் எதிரே உட்கார்ந்தான்.
"அப்பா ரொம்ப பெரிய சர்ப்ரைஸ். அந்த பேப்பர் மாடல் பேப்பர் இல்லை. அதே பேப்பர்; அன்னிக்கு அந்த ஆளு கொண்டு கொடுத்த அதே பேப்பர். ஒரு கேள்விகூட தவறாம நூறு கேள்வியும் அதே வந்தது".
"அப்படியா தட்ஸ் லக்கி! எழுதிட்டயோல்றீயோ? அதான் சீக்கிரமே எழுதிட்டு வந்துட்டியா?"
"இல்லை எழுதாம வந்துட்டேன்"
அதிர்ந்து போய் "என்னது" என்றார்.
"ஆமாம் வெறும் தாளைக் கொடுத்துட்டு எழுந்து வந்துட்டேன்"
"என்னடா சொல்றே பைத்தியக்காரா! ஏண்டா"
"எனக்கென்னவோ இது நியாயமில்லைன்னு பட்டுது; பத்தாயிரம் பேர் எழுதறாங்க. ஒழுங்கா நேர்வழியில் மாஞ்சு மாஞ்சு எழுதறாங்க. நான் மட்டும் திருடப்பட்ட, லீக் ஆன பேப்பரை வெச்சு எழுதறது. இட்ஸ் நாட் பேர். அப்பா நீங்க அன்னிக்குப் பேசிண்டிருந்ததை கவனிச்சப்ப அந்தாளுக்கு ஏதோ காரியம் செய்ததுக்கு லஞ்சம் மாதிரித்தான் இந்த பேப்பரோன்னு தோணித்து, எனக்குப் பிடிக்கலைப்பா!".
ராம துரை கிட்டே போய் அவனை அணைத்துக் கொண்டார்.
"என்னடா பிடிக்கலை"
"அப்பா நீங்க எவ்வளவு சுத்தமானவர்னு தெரியும். எனக்காக நீங்க உங்களைக் கறைப்படுத்திக்கறதை நான் விரும்பலை. அப்புறம் இந்த மாதிரி பரீட்சையெல்லாம் சொந்த முயற்சியில்தான் பாஸ் பண்ண விரும்பறேன். உங்களைச் சார்ந்து இருந்தது போதும் எனக்கு!"
தீபாவளி
ஸ்ரீரங்கம், சென்னை, டெல்லி, பெங்களூர், அமெரிக்கா என்று பல இடங்களில் தீபாவளி கொண்டாடின அனுபவம் எனக்கு உண்டு.
சின்ன வயசில் தீபாவளியைவிட, அதன் எதிர்பார்ப்புகள்தான் சுவாரஸ்யமாக இருக்கும். புதுத் துணி வாங்குவது, பட்டாசு வாங்கி நன்றாக வெயிலில் காயப் போடுவது, அண்ணனுடன் பங்கு பிரித்துக்கொள்வது, டெய்லரிடம் சட்டை, டிராயருக்கு அளவு கொடுப்பது, அவர் ராத்திரி பன்னிரண்டு மணி வரை இழுத் தடிப்பது, தீபாவளி மலருக்கு அட்வான்ஸ் கொடுப்பது, தீபாவளி ரிலீஸ் படங்களின் சுவரொட்டிகளைப் பார்த்துப் பரவசப்படுவது... எல்லா எதிர்பார்ப்புகளும் பொழுது விடிந்து, எண்ணெய் தேய்த்துக்கொண்டு லேகியமும், தேங்காய் பர்பியும், தேன்குழலும் சாப்பிட்டபின் ஆவியாகிவிடும்!
பட்டாசு சீக்கிரமே தீர்ந்துவிடும். பாதி வெடிக்காது. ஆட்டம்பாம் ரெண்டு பொறி உதிர்த்துவிட்டு, கம்மென்று இருக்கும். பாம் ஸ்குவாடு போல, கிட்டே போய் அதை உதைக்க வேண்டும். அடிவயிற்றைக் கலக்கும். அடையவளஞ்சான் குட்டிப் பையன்கள் வந்தால், தைரியமாக அதைக் கையில் எடுத்து ஊதி, மாற்றுத் திரி போட்டு, 'டமால்' என்று வெடிக்க வைப்பார்கள்.
தீபாவளி ரிலீஸ் படங்கள் அத்தனை சிறப்பாக இருக்காது. தைத்த சட்டையில் காஜா அடிக்காமல், பட்டன் உதிரும். சட்டை நெஞ்சைப் பிடிக்கும். டிராயர் இடுப்பில் நிற்காது. இதையெல்லாம் சின்ன வயசில் பொருட்படுத்தாமல் ராத்திரியை, கார்த்திகையை, அடுத்த தீபாவளியை எதிர்பார்த்திருப்போம். பட்டாசு சுடுவதன் மகிழ்ச்சி இன்றும் பாக்கியிருக்கிறது. மற்றதெல்லாம் வேஷம் மாறிவிட்டது!
ஓலைப்பட்டாசு என்று ஒன்று இருந்தது. இப்போது அது தடை செய்யப்பட்டுவிட்டது. அதில் இரண்டு வகை. வாலுள்ளது, இல்லாதது.
கொள்ளிடம் போகும் பாதையில், ஒரு கடையில் செய்து சல்லிசாக விற்பார்கள். வெடி, காது அதிரும். வாலில்லாத ஓலைப்பட்டாசைக் கையில் பிடிப்பதுதான் தலையாய வீரம். வடக்கு வீதியில் கே.வி. ஒருத்தன் தான் அதைச் செய்வான். முழுச் சரத்தையும் கையில் வைத்துக்கொண்டு, அதைத் தூரப்போடா மல், வீரப்பனுக்கு வெடித்தார்களே... அதைப்போல வெடிப்பது இரண்டாவது வீர சாகசம். முன்பு சொன்னதுபோல வெடிக்காத குண்டைச் செயலிழக்கச்செய்ய, புத்தர்போல அமைதி யாக இருக்கும் லட்சுமி வெடியை அணுகி உதைப்பதுதான் மூன்றாவது வீரம்.
அதைப் புதுசாகத் திரி போட்டு வெடிக்க வைக்கும் சின்னப் பசங்களின் கிழிந்த டிராயரும், எண்ணெய் கண்டிராத பரட்டைத் தலையும், அப்போதே சமூகத்தின் அடித்தள ஏழ்மையை எங்களுக்கு அறிவிக்கும். என் அண்ணா, தன் பட்டாசில் பாதியை அவர்களுக்குக் கொடுத்துவிடுவான்!
தீபாவளி ரிலீஸ் படங்கள் பார்ப்பது சிலருக்குக் கட்டாயப் பாடம். என் உறவுக்காரப் பெண்மணி கோமளா, அதிகாலை எண்ணெய் ஸ்நானம் ஆன கையோடு, திருச்சி வெலிங்ட னுக்குப் போய், அங்கே காலைக் காட்சி பார்த்துவிட்டு, அருகே ராக்ஸியில் மத்தியானக் காட்சியும், அங்கிருந்து ராஜா தியேட்டர் போய் சாயங்காலக் காட்சியும், படம் நன்றாக இருந்தால் இரவுக் காட்சியும் பார்த்துவிட்டுக் கண்கள் சிவக்க வீடு வருவாள்.
என்ன கதை என்று கேட்டால் குழம்புவாள். புராணக் கதையும் சமூகக் கதையும் காபி போலக் கலந்து சொல்வாள். இப்போது அந்தத் தியேட்டர்களும் இல்லை... கோமளாவும் இல்லை!
வாழ்க்கையின் வருஷங்கள் கழியும்போது, தீபாவளியின் முக்கியத் துவமும், ஆரவாரமும் பரபரப்பும் மெள்ள மெள்ளத் திருத்தப்பட்டுத் தணிந்து, இப்போதெல்லாம் சாவகாசமாக எழுந்து, ஒரே ஒரு கை எண்ணெய் வைத்துக் குளித்துவிட்டு, கை வைத்த ஒரு புது பனியனும் வேஷ்டியும் அணிந்துகொண்டு, ஒரு சிலரோடு 'ஹேப்பி தீபாவளி' போன் பேசுவதோடு சரி!
டெல்லியில் தீபாவளி வேறுவிதமாக இருக்கும். அஜ்மல்கான் ரோட்டில், எவர்சில்வர் பாத்திரக் கடைக்காரர் தெருவையே அடைத்துவிடுவார். பஞ்சாபி இளைஞர்கள், கேர்ள் ஃப்ரெண்டுகள் கவனிக்கும்படியாக, பார்க்கில் அட்டகாசமாகப் பட்டாசு சுடுவார்கள். அப்போதே டென் தவுசண்ட்வாலா எல்லாம் இருந்தது!
பெங்களூரில் தீபாவளி, தமிழர்கள் மட்டும் அதிகம் கொண்டாடும் பண்டிகை. மல்லேஸ்வரம் மைதானத்தில் எல்லா பட்டாசுக் கடைக்காரர்களும் ஒன்று சேர்ந்து விற்பார்கள். கன்னடக்காரர்களுக்குப் புதுசு உடுத்தும் வழக்கம் கிடையாது. வேடிக்கைக்குப் பட்டாசு வெடிப்பார்கள்!
அமெரிக்காவில் ஒரு வருஷம் மவுண்டன் வியூவில், நண்பர் வீட்டில் தீபாவளி கொண்டாடினோம். அருகாமைத் தமிழர்கள் அனைவரும் கூடி, சாஸ்திரத்துக்கு ஒரே ஒரு புஸ்வாணம்தான் வைக்க முடிந்தது. 'வெடி வெடிப்பதற்கு போலீஸ் அனுமதி வேண்டும்' என்றார்கள். எல்லாரும் சேர்ந்து பெரிய விருந்து. தீர்த்தவாரி!
கேரளா, மகாபலி சக்ரவர்த்தியைக் கொண்டாடுவதால், தீபாவளி சுத்தமாகக் கிடையாது. ஆந்திராவிலும் பெரிசாக இல்லை. தீபாவளியை அகில இந்திய விழாவாகச் சொல்லமுடியுமா... தெரியவில்லை.
ஆனால், தீபாவளி தமிழ்நாட்டின் பொருளாதாரத்துக்கு ஒரு முக்கியமான அம்சமாகிவிட்டது. நரகாசுரன் சாகவில்லையேல், சிவகாசியும் பட்டுச் சேலையும் பிழைக்காது! தீபாவளிக்கு நண்பர்களுக்கு ஒரு கிரந்தம் (புத்தகம்) தரவேண்டும் என்று, ஒரு புராணக்கதை விஷ்ணு புராணத்தில் எங்கிருக்கிறது என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.
What are some interesting fact about the writer Sujatha?
- Rangarajan (Sujatha) studied his B.Sc (Physics) degree in St. Joseph's, Trichy (1954), guess who was his classmate there? Dr. APJ Abdul Kalam!
- Then he graduated in electronics engineering from Madras Institute of Technology, while Dr. Kalam graduated in Aerospace engineering at the same institution. They are good friends.
- He headed the team of engineers who designed and developed the electronic voting machine, now widely used across India.
- His pen name (Sujatha) is his wife's name. (He adapted it following the advice of the then Vikatan's editor, since there was already another Rangarajan in the office - I vaguely remember this, will verify shortly!)
- Rangarajan worked in the ATC (Air Traffic Control center) and also had basic pilot grinning training (He displays this knowledge in his novel "J.K.")
- He spent a complete day with the then commissioner of Bangalore, Mr. Karthikeyan, IPS, for one of his novels. He have also written his experience with the commissioner and his tedious work structure in his essay " Commisioner'ukku Kadidham"
- Sujatha was born in Chennai, but brought up in Trichy, by his strict grandmother. He have lived in Chennai and Bangalore for most of his life. Vivid and detailed descriptions of these three cities can be seen in his stories and novels.
- Sujatha was one of the first few writers to introduce science and technology among the Tamil readers. Government of India honored him with its awards for this.
- Sujatha, being an Iyengar brought up by a strict grandmother, is well versed in Vaishnavite Scriptures, especially Nalayira Thivya Prabandham. He quotes many verses from this work by the Alwars in his stories and novels.
- Sujatha was so successful that other envious writers criticized that even his "laundry bills" will get published, if sent by him to magazines. Sujatha himself hints/alludes to his popularity or such envious criticisms in many if his works, with sarcasm.
- Sujatha was able to successfully experiment with story telling techniques. Not only in the narration or use of language, but he was also innovative in presentation. In one of his novels, 'iranginaal' (she climbed down) is written in the form a stair case itself:
I
R
A
N
G
I
N
A
A
L
- Ganesh - Vasanth is a lawyer dou who also investigate crimes as private detectives. They are the most famous characters of Sujatha's work. Vasanth is more famous than Ganesh among the duo. One of the reason the characters become famous is Sujatha's ability to keep them updated across three generations of readers. They are the equivalent of Sherlock Holmes and Watson for a Tamil reader. Their (fictional) residence, Thambu Chetty Street, Broadway, is as famous as the Baker Street one.
- Sujatha have also served as the editor of various print and online magazines such as Kumudham, Ambalam, etc.
- He have also worked as the Screenplay writer for many Tamil movies, most of them directed by Shankar. Super Star Rajini starer "Endhiran" (Robot) is his last film.
- Sujatha is also a poet, able to pen both free and prosodic verses (Search online for " உடல் கவிதை"/ "Udal Kavidhai") In one of his answers he had jokingly mentioned that he might publish his poem collections titled as " Nylon There" (Nylon Chariot) ("Nylon Kayiru" being his first novel) But he actually didn't wanted to write more poetry. However, he used to mention and appreciate the works of new and old poets alike in his works.
Writer Sujatha - Updated List of Novels in Tamil
NOVELS
1. Aaah – a novel based on hallucinations, which was published in Ananda Vikatan every week. Its each of the episode starts with the exclamation phrase "Aaah" and ends with "Aaah".
2. Pirivom Sandhippom 1 - A love story set in Tamiraparani which then travels to New York. Captures a glimpse of an NRI Tamil's life in the early 80s. This novel was later made into a film called Ananda Thandavam (film).
3. Pirivom Sandhippom 2
4. Kolayudhir Kaalam - One of the Novel where the famous duo Ganesh and Vasanth appears to solve a supernatural mystery in an Estate House. Detailed descriptions on the Hologram technology, which was a then latest technological trend were included in the story.
5. En Iniya Iyanthira (My Dear Machine) – A science-fiction novel in Tamil involving robots. The novel features Nila, Ravi, Mano, Jeano – a robo dog. The story is written like everything is happening in 2020 A.D.
6. Meendum Jeano (Jeano again) – a sequel to En Iniya Iyandhira
7. Srirangathu Dhevadhaigal (Angels of Srirangam) - a series of short stories featuring Sujatha's experiences as a boy, a youth and a man in Srirangam, depicting incidents when he was staying in his grandmother's house in Srirangam.
8. Karaiyellam Shenbagapoo - A mystery novel in which the male leading character travels to a village for his research on rural songs, and encounters mysterious incidents around him.
9. Nylon Kayiru (Nylon Rope)
10. Nillungal Raajaave - A science fiction masterpiece. Recent Tamil movie Maayavan is very similar to this plot.
11. Kanavu Thozhirchaalai - A novel based on Tamil Cinema industry and a leading Hero of 80's. (Though the character does not indicate any real persons)
12. Ratham Ore Niram - Set in Pre-Independence period, this novel narrates the story of young man who wants to take revenge on a British officer who killed his father. The plot is based on a true historic incident, which is called the Cawnpore Maasacre, where hundreds of British men, women and children were killed by the Indian rebellion army during the Sepoy Mutiny period.
13. Pesum Bommaigal
14. Anithaavin Kadhalgal - A family novel based on the life, love and desires of a young girl named Anitha.
15. Vasanth Vasanth
16. Computer Graamam
17. Nirvaana Nagaram
18. Vikram
19. Odaadhey - Suspense Thriller novel based on the incidents which a newly wedded couple, who plans for their honeymoon, face.
20. 24 Rubaai Theevu[4]
21. Eppodhum Pen (Always a woman) – A Tamil novel influenced by Simone De Beauvoir's The Second Sex
22. Idhan Peyarum Kolai
23. Irandaavadhu Kaadhal Kadhai
24. Kolai Arangam - A murder mystery novel where the popular duo Ganesh and Vasanth appear to solve the mystery.
25. Edhaiyum Oru Murai
26. Anitha Ilam Manaivi – a crime story, where one of the famous duo Ganesh appears.
27. Yavanika - A short novel in which Ganesh and Vasanth appear to solve a stolen statue called "Yavanika"
28. Niramatra Vaanavil
29. Sorgatheevu – one of the first science fiction works in Tamil
30. Theendum Inbam
31. Aadhalinaal Kaadhal Seiveer
32. Pookutti
33. Irul varum Neram
34. Kaandhaloor Vasanthakumaaran Kadhai - A historic fiction that centers around Raja Raja chozhan empire
35. Oru Naduppagal Maranam
36. Priya
37. Vasantha Kaala Kutrangal
38. Pen Iyandhiram
39. Nila Nizhal
40. Aayirathil Iruvar
41. Aryabhatta
42. Padhavikkaga
43. Ullam Thurandhavan
44. Marubadiyum Ganesh
45. Vannathu Poochi vettai
46. Commissioner ku kadidham
47. Vidivadharkul Vaa
48. Thanga Mudichu
49. Ore Oru Dhrogam - A novel which flows in the perspective of two, a fraudulent husband and his innocent wife who does not know of his real face.
50. Aindhaavadhu Adhiyaayam
51. Sivandha Kaigal
52. Endraavadhu Oru Naal
53. Thisai Kanden Vaan Kanden
54. 10 Second Mutham - A novel about a young athlete girl who comes to a world sports tournament along with her uncle who is also her coach, and is obsessed with her.
55. Thedaadhe
56. Roja - Story of a police officer who strive to find an unknown rapist of a young girl.
57. J K
58. Veniyin Kaadhalan
59. Vaaimaye Sila Samayam Vellum
60. Kaagidha Sangiligal - One of the first Tamil creation that described about the Kidney failure. This is a story of a young wife strives to save her husband who suffers from Kidney failure.
61. Unnai Kanda Neramellam
62. Vaanam Ennum veedhiyile
63. Chinnakuyili
64. Moondru Kutrangal
65. Kaalgal - A fiction in the perspective of a man who goes to an Anglo-Indian home and meets an old man.
Writer Sujatha Biography in Tamil
S.ரங்கராஜன் பிறந்தது சென்னைத் திருவல்லிக்கேணியில் உள்ள தெப்பக் குளத்தின் தெற்குத் தெரு வீதியில். மே 3, 1935 அன்று. வைஷ்ணவர். அப்பா சீனிவாச ராகவன் மின்சாரவாரியம் வாரியமாவதற்கு முன்னால் இருந்து வேலை செய்து கொண்டிருந்தார். அம்மா கண்ணம்மா, ஒரு பணக்காரக் குடும்பத்தில் இருந்து வந்தவர். “சரியாக எழுபது ஆண்டுகளுக்கு முன், வீட்டுக் காரியங்கள் எல்லாம் முடித்துவிட்டு, வலியெடுத்து, எந்தவித உதவியும் இல்லாமல், அப்பா மருத்துவச்சியை அழைத்து வருவதற்க்குள், என்னைப் பெற்றெடுத்த என் அம்மா கண்ணம்மா”.
ரங்கராஜனின் அண்ணன் திரு கிருஷ்ணமாச்சாரி ஒரு டாக்டர், தம்பி ராஜகோபாலன் தொலைபேசி இலாகாவில் இன்ஜினியர். தங்கை விஜி. “ராத்திரி என்னவோ ஆச்சு… ரெண்டு தடவை வாந்தியெடுத்தா. கார்தாலை பிராணன் போய்ட்டது’ என்று பாட்டி அழுதாள். எனக்கு அப்போது பதினொரு வயசு. என் தங்கை விஜிக்கு மூன்று வயது. குழந்தை என்பதால் கையிலேயே தூக்கிப் படித்துறைக்கு கொண்டுசென்று கொள்ளிடக்கரையில் புதைத்தது ஞாபகம் இருக்கிறது. முதன்முறையாக ஆற்றாமை, சோகம் க்ரீப் என் நடைமுறையை பாதித்தது.”
ரங்கராஜன் பிறந்த அந்த வீடு திருவல்லிக்கேணியில் 70 வருடம் கழித்தும் இடிபடாமல் இருக்கிறது.
பிறந்தது சென்னையில் என்றாலும் வளர்ந்தது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். தாத்தா குவளக்குடி சிங்கமையங்கார். அப்பாவின் உத்யோகம் காரணமாக அவர் அடிக்கடி இடம் மாறுவதால், முதல் பதினேழு வருடங்கள் கோதை அம்மாள் என்கிற ருக்குமணி அம்மாள் பாட்டியுடன் வளர்ந்தார். “பாட்டி என்னை எத்தனைத் தூரம் காப்பாற்றி இருக்கிறாள். ஒரு பெரிய சொத்துக்கு சுவிகாரம் கொடுப்பதை கடுமையாக எதிர்த்துத் தடுத்தியிருக்கிறாள். அந்த சுவிகாரம் நடந்திருந்தால் நான் மகேந்திரமங்கலத்திலோ குவளக்குடியிலோ ஒரு பண்ணையாராக வெள்ளிச் சொம்பும், பன்னீர் புகையிலையும் பத்தமடைப் பாயும், இஸ்பெட் ஆட்டமுமாக வளர்ந்திருப்பேன். எழுத்தாளனாகியிருப்பேனா…சந்தேகம்.”
ஸ்ரீரங்கத்தில் The Highschool என்னும் ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளியில் படிப்பு. ரங்கராஜன் படிப்பில் சுட்டியாக இருந்தும் பிரபலமாக எல்லாம் இல்லை. பள்ளிப் படிப்பிற்கு பின் திருச்சிக்கு ஜாகை மாறி, இண்டர்மீடியட் என்று இரண்டு வருடமும், பின் பிஎஸ்சி physics இரண்டு வருடமும் படித்தது புனித சூசையப்பர் காலேஜில். இந்த ஜோசப் காலேஜில் தான் ரங்கராஜனுக்கு ஒரு வாழ்க்கைத் திருப்பம் காத்திருந்தது.
என்ன தான், ஸ்ரீரங்கத்தில் மற்றோரு ரங்கராஜனுடன்(இப்போது கவிஞர் வாலி) சேர்ந்து கையெழுத்துப் பிரதி நடத்திக் கொண்டிருந்தாலும், எழுத்தார்வம் அதிகமானது கல்லூரியில் தான். அப்போது கூட படிக்கத்தான் ஆசை. காரணம் ஜோசப் சின்னப்பா என்ற ஆங்கில விரிவுரையாளரும், ஐயம் பெருமாள் கோனார் என்னும் தமிழாசிரியரும் தான். ஜோசப் சின்னப்பா நடத்திய நான்-டீடெய்ல்டு பாடத்தினால் சிறுகதைகளார்வமும், ஐயம் பெருமாளினால் தமிழார்வமும் ரங்கராஜனுக்கு அதிகமாயின.
1953ல் முதன்முறையாக ஒரு சிறுகதை எழுதி அனுப்பினார். அது ‘சிவாஜி’ என்ற புத்தகத்தில் வெளிவந்தது. “கதை வெளிவந்த போது திருச்சி நகரமே அளம்பி விட்டாற்போல இருந்தது. அந்த வட்டாரத்தில் ‘சிவாஜி’ இதழின் காப்பிகள் கடகடவென்று விற்றுத் தீர்ந்து விட்டன, எல்லாவற்றையும் நானே வாங்கி விட்டதால்”.
அதே ஜோசப் கல்லூரியில் அவருடன் படித்த சக மாணவர், தற்போது இந்தியாவின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். கல்லூரிக்குப் பின்னர், சென்னை குரோம்பேட்டையிலுள்ள MITல்(Madras Institue of Technology), சேர்ந்து எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்தார். அப்போதும் அவரின் பாட்ச்சில் படித்தவர் அப்துல் கலாம். கலாம் அப்போது ஏரொனாட்டிக்ஸ் படித்துக் கொண்டிருந்தார். அப்போதே ரங்கராஜன் Infinite Mathematics பற்றியும் கலாம் ஆகாய விமானங்கள் கட்டுவது பற்றியும் தமிழில் விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதி, இருவரும் பரிசு வாங்கினர்.
இன்ஜினியரிங் படிப்பிற்கு பிறகு, ஸ்ரீரங்கத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவரை அவர் தந்தை, வேலைக்கு விண்ணப்பிக்குமாறு அனுப்பினார். இந்திய அளவில் இன்ஜியர்களுக்கான தேர்வு எழுதி ஆல் இந்தியா லெவலில் இரண்டாம் ரேங்க் வாங்கினார். இது நடந்தது 50களில். அப்போது ஐ.ஏ.எஸ் போன்றோரு எக்ஸாம் இது.
இந்திய அரசாங்கம் ரங்கராஜனை அள்ளிக் கொண்டு போய் டெல்லியில் விட்டது. முதலில் ஆல் இந்தியா ரேடியோவில் ட்ரைனியாகச் சேர்ந்தார். பிறகு முதல் வேலையாக சிவில் ஏவியேஷன்ஸ் பிரிவில், Air Traffic Controllerஆக சென்னை மீனம்பாக்கத்தில் சேர்ந்தார். இரண்டொரு வருடங்களுக்குப் பிறகு ‘கிளாஸ் ஒன் – டெக்னிகல் ஆபிசராக’ வேலை மாறி டெல்லி சென்றார்.
பெரிய பெரிய இடங்களில் இருந்து ரங்கராஜனுக்கு வரன்கள் வர, அவரின் அப்பாவோ தன்னுடய ஆபிஸ் நண்பரின் பெண்ணை மணமுடிக்க ஏற்பாடு செய்தார். சுஜாதா எத்திராஜில் பிஎஸ்சி படித்த வேலூர்ப் பெண். ரங்கராஜனுக்கும் – சுஜாதா(!!)விற்கும் கல்யாணம் நடைப்பெற்றது. “அப்போ எனக்கு இருபது வயசு. இவருக்கு இருபத்தேழு. காலேஜ் முடிச்சுட்டு நான் நேரே வந்ததால், எனக்கு உருப்படியா நல்ல ரசம் கூட வைக்கத் தெரியாது. டெல்லியில் குடியிருந்த நம்ம தமிழ் மாமி ஒருத்தர்கிட்டேதான் போய் ஒவ்வொண்ணா சமைக்க கத்துக்கிட்டு வந்தேன். வெடிக்கிற அபாயம் இல்லாத ருக்மணி பிரஷர் குக்கர்லதான் சமையல்!”. பிற்காலத்தில் தன் மனைவியின் பெயரான சுஜாதா என்பது பிரபலமாகப் போகிறது என்பது அப்போது ரங்கராஜனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.
இந்த சமயத்தில் தான் வேலை நிமித்தமாக அடிக்கடி டூரில் சென்றார். அப்போது பொழுது போக நிறைய படிக்கவும் எழுதும் ஆர்வம் அதிகமானது. தனது நண்பனான் ஸ்ரீனிவாசனின் சுஷ்மா எங்கே ? என்ற ஒரு க்ரைம் கதையை கொஞ்சம் திருத்திக் கொடுக்க, அது குமுதத்தில் வெளியிடப்பட்டது. அதை தனது எழுத்துக்கான அங்கிகாரமாக வைத்து சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார்.
குமுதத்தில் ஏற்கெனவே ஒரு (ரா.கி) ரங்கராஜன் இருந்ததால் ”நீங்க வேற ஏதாவது பேர் வச்சுக்கங்களேன்!…” என்று சிலர் சொல்ல, ரங்கராஜன், சுஜாதா என்கிற தன் மனைவி பேரில் எழுத ஆரம்பித்தார். தமிழ் இலக்கிய உலகம் தலையை சிலுப்பி கொண்டு எழுந்தது. ரங்கராஜன் காணாமல் போய் சுஜாதா என்கிற மூன்றெழுத்து பிரபலமாக ஆரம்பித்தது.
ரங்கராஜன் தம்பதிகளுக்கு ஒரு வருடத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்தது. அதற்குப் பிறகு ரங்க பிரசாத், கேஷவ பிரசாத் என்று இரண்டு மகன்கள். கேஷவ் பிரசாத்திற்கு திருமணமாது ‘கே’ என்கிற ஜப்பானிய பெண்ணுடன். அவர்களுக்கு சித்தார்த் என்று ஒரு மகன், இவருடைய பேரன்.
டெல்லியில் பதினான்கு வருடங்கள் கழித்து, 1970ல் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ்[BEL] நிறுவனத்தில் டெபுடி மானேஜராக வேலைக்குச் சேர்ந்தார். அதன் பின் முப்பது வருடங்கள் பெங்களூர் வாசம் தான். பிறகு சிறிது வருடங்களில் ரிசர்ச் அண்டு டெவலப்மெண்டு பிரிவில் ஜிஎம் பதவிக்கு உயர்ந்த போது, கடுமையான வேலைகள் காத்துக் கொண்டிருந்தன. Electronic Voting Machine(EVM) என்று இன்றுள்ள வாக்கெடுப்பு இயந்திரத்தை தயாரித்த BELலின் R &D பிரிவின் சீப் ஆக பணியாற்றினார். இந்த வாக்கெடுப்பு மிஷின் தான் இந்தியாவெங்கும் பயன்படுத்தப் படுகிறது.
இங்குதான் மீண்டும் தன் நண்பர் கலாமுடன் சேரும் வாய்ப்புக் கிடைத்தது. இருவரும் ஏவுகணை ப்ரோக்கிராமிங் செய்தார்கள். கலாமைப் பற்றி தனது நினைவுகளை பேசியும் எழுதியும் வந்திருக்கிறார் சுஜாதா. அவர்களிருவரும் சேர்ந்து ராக்கெட் இயலை பற்றி திப்பு சுல்தான்லிருந்து தொடங்கி எழுத நினைத்திருந்தனர். இன்னும் எழுத வாய்ப்புக் கிடைக்கவில்லை.
இதே நேரத்தில், எழுத்துலகில் ராக் ஸ்டார் அளவிற்கு புகழ் பெற்றார். ஒரே நேரத்தில் ஐந்து புத்தகங்களில் ஆறு தொடர்கதைகளெல்லாம் எழுதினார். “இவர் எழுதினா இவரோட லாண்டிரி பில்லைக் கூட பப்ளிஷ் செய்வாங்க” என்றெல்லாம் பேசினார்கள். கதை, கட்டுரை, நாடகம், ஊடகம் என்று தனது எல்லைகளை விரிவாக்கிக் கொண்டு எழுதினார். இவரின் கதைகள் நன்றாக இருந்தாலும் அவைகளை சினிமா படமெடுத்தவர்கள் மாற்றியதால் தோல்வியைத் தழுவின. பாலசந்தருக்கு நினைத்தாலே இனிக்கும் படத்துக்கு முதன் முதலில் வசனமெழுதினார்.
1993ல் பிஇஎல்லிலிருந்து ரிடையரான போது முடிவெடுக்கப் பட வேண்டிய விஷயம் ஒன்றிருந்தது. ரிடையர்மெண்டுக்கு பிறகு எங்கு செல்வது? சென்னை செல்ல வேண்டாம், குடிநீர்ப் பிரச்சனை என்று சொன்ன நண்பர்களை தட்டிக் கொடுத்து சென்னையில் ஆழ்வார்ப்பேட்டையில் குடியேறினார்.
இதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்னர் தான் மணிரத்னத்தின் ரோஜா படத்திற்கு வசனமெழுதினார். அந்தப் படம் தமிழ் சினிமாவை நிறையவே மாற்றிப் போட்டது. சென்னைக்கு வந்த பின், கமல் சொல்லி ஷங்கரின் படங்களுக்கு வசனம் எழுத ஆரம்பித்தார். சிவாஜி புத்தகத்தில் வந்த சிறுகதை தொடங்கி இன்று ரஜினியின் சிவாஜிப் படத்திற்கு வசனம் வரை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு காலம் எழுத்துலகில் இருந்து வந்திருக்கிறார். இன்று வரை 100 நாவல்களும், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 15 நாடகங்களும், ஏராளமான விஞ்ஞான மற்றும் இதர கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். நண்பர்களுக்காக அவ்வப்போது சினிமாப் பட வசனம் எழுதுகிறார்.
“Writing was never my career, it was my hobby” என்பார். தொடக்கத்திலிருந்து அந்த creative impulseஐ வெளிப்படுத்த பல்வேறு விஷயங்களை செய்திருக்கிறார். படம் வரைந்திருக்கிறார்.”நான் எழுத வரலைனா படம் வரைஞ்சுண்டு இருப்பேன்”. ஹார்மோனிகா முதற்கொண்டு புல்லாங்குழல், புல்புல்தாரா வரை எல்லாம் வாசித்துப் பழகியிருக்கிறார்.
“ஒரே ஒரு முறை, “மாடில பூனை குட்டி போட்டிருக்கா பாரு” என்று கேட்டாள் பாட்டி.
“பூனை இல்லை பாட்டி…புல்புல்தாரா, நான் வாசிக்கறது”.
“நீ மாடிக்கு படிக்கப்போறேன்னு நினைச்சேன்”.
“அது வந்து..படிப்பேன்..அப்பப்ப வாசிப்பேன்”.
“ஒண்ணு படி…இல்லை மோர்சிங் வாசி”.
“மோர்சிங் இல்லை…புல்புல்தாரா”
“பேரைப் பாரு!! உங்கப்பாவுக்கு லெட்டர் போட்டுர்றேன்…எனக்கு கவலையா இருக்கு. இன்னிக்கு புல்புல் வாசிப்ப…நாளைக்கு புகையில போடுவ.. கூத்தாடியாத்தான் வரப்போறேன்னா ஒரு காரியத்தை உருப்படியாப் பண்ணு…உங்கப்பன் காசைக் கரியாக்காதே”
டெல்லிக்குப் போய் ஒரு கிட்டார் வாங்கி தானகவே பழகிக்கொண்டார். மனைவி – “அப்போ மேற்கத்திய இசை உலகில் ‘பீட்டில்ஸ்’ வந்த பீரியட். இளைஞர்கள், கிதார் கிதார்னு பைத்தியமா இருந்த நேரம்! இவர் ரொம்ப அருமையா கிதார் வாசிப்பார்!… கிதார் மட்டுமல்ல… எல்லா இசைக்கருவிகளையுமே நல்லா வாசிப்பார். இவர் யார்கிட்டேயும் இதுக்காக கத்துகிட்ட மாதிரி தெரியலே… அவரேதான் முயற்சி பண்ணி வாசிச்சார் போல!…”
இதைப் போல் எதைச் சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்ற நிலையில் பலவகையான false startsக்குப் பின் தன் ஆரம்பக் காதலான எழுத்துக்கு திரும்பி வந்துவிட்டார்.
சுஜாதாவிற்கு என்பதுகளின் நடுவிலும் பிறகு 2002லும் உடல் நிலை பாதித்தது. இரண்டு முறை ஆன்ஜியோவும் ஒரு பைபாஸும் செய்திருக்கிறார்கள். தன் உடல் நிலை காரணமாக அதிகமாக நடமாட முடியாமல் சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் எழுத்தார்வமோ குறைவதாகக் காணோம்.
தற்போது மயிலாப்பூரில் ஒரு ப்ளாட்டில் தனது மனைவி சுஜாதா மற்றும் கிவி என்றொரு செல்ல நாயுடன் வசித்து வருகிறார். இரு மகன்களும் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.
அம்பலம்.காம் என்னும் ஒரு வலைதளத்தின் நிர்வாகப் பொறுப்பில் தற்போது பணியாற்றுகிறார். பெண்டாபோர் சந்திரசேகரனுடன் மீடியா ட்ரீம்ஸ் என்னும் ஒரு படத்தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மனைவி – “தினமும் ‘அம்பலம் டாட் காம்’ ஆபீஸக்கும், பென்டாஃபோரோட ‘மீடியா ட்ரீம்ஸ்’ ஆபீஸக்கும் காலையில் போய்ட்டு வருவார். மதியம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அஞ்சரைக்கு மேல மெரினாவில் வாக் போயிட்டு வருவார். வந்தப்புறம் எழுதறது, படிக்கிறதுன்னு சமயத்தில் நைட் ஒரு மணி வரைகூட வேலை பார்ப்பார். ”
வாராவாரம் சனிக்கிழமையன்று அம்பலம்.காமில் வணக்கம் நண்பர்களே என்று சாட்டுக்கு வந்து விடுவார். தனது வாசகர்களுடன் வாராவாரம் சாட் செய்யும் தமிழ் எழுத்தாளர் இவர் ஒருவர் தான். நீங்கள் கூட writersujatha@hotmail.com என்று மெயிலனுப்பலாம். ரத்தின சுருக்கமாய் எழுதினால் பதில் கண்டிப்பாய் வரும்.
என் பழைய நண்பி ஒருவர் தன் தந்தை இறந்ததை பற்றி சுஜாதாவிற்கு உருக்கமாக மெயிலனுப்பிய போது, வந்தது பதில்,” Nobody dies; they live in memories and in the genes of their children”. How True ?
Source: https://kirukkal.com/2007/04/28/writer-sujatha-short-biography/
Srirangathu Devadhaigal
If you read this, I am assuring it will give more enjoyment. Just click the below pdf book download link and get the book to read.
| Category | : | Sirukathaigal |
| Writer | : | Sujatha |
| Publisher | : | Kizhakku Pathippagam |
| ISBN | : | 9788184936544 |
| Pages | : | 136 |
| Published Year | : | 2011 |
மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் எழுத்தில் வந்த மிக முக்கியமான, சுவாரசியமான சிறுகதைத் தொகுப்பு இந்த - ஸ்ரீரங்கத்து தேவதைகள். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒருவித எழுத்து நடை இருக்கும், ஆனால் சுஜாதா அவர்களின் எழுத்து நடையில் ஒருவித யுனிக்னெஸ் இருப்பதை அவரின் புத்தகங்களைப் படித்தவர்கள் நிச்சயம் உணர்ந்திருக்க முடியும். பொதுவாக சுஜாதாவின் புத்தகங்களைப் புதிதாகப் படிப்பவர்களுக்கு இரண்டு மூன்று பக்கத்திற்கு குழப்பமிருக்கும், ஆனால் தொடர்ந்து படிக்கும் போதுதான் அந்நடையின் உயிரோட்டம் புரிந்து, கதையில் கூறப்படும் செய்திகள் கண்முன்னே கானல்நீர்ப் போலத் தோன்றும்.
இப்புத்தகத்தை வாசித்து முடித்த அனைவருக்கும் முதலில் வரும் ஐயப்பாடு, புத்தகத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் கற்பனையா அல்லது நிஜத்தில் நடந்த நிகழ்ச்சிகளா? என்பதாக இருக்கும். இங்குதான் சுஜாதா அவர்களின் இன்னொரு வெற்றி நிகழ்ந்திருக்கிறது.
சிறு சிறு கதைகளாக மொத்தம் பதினான்கு, அதில் முதல் கதையில் வரும் பாத்திரங்களில் ஒருவரே அடுத்த பகுதியின் நாயகன்/நாயகியாக இருப்பார். கதை சொல்லப்படும் விதம் எழுத்தாளர் நமக்கருகில் நின்று சுட்டிக்காட்டுவது போல் பயணிக்கும். கதையை வாசிக்கும் பொழுது சில நேரங்களில் நம் உதட்டருகில் ஒரு மெல்லிய புன்னகையும், சில நேரங்களில் சோகமும் சூழ்ந்துகொள்வது போன்ற உணர்வும் ஏற்படுகிறது.
கதையின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலைத் தனியே பிரித்து வைத்தது போல் தெரியாமல், அவ்வாழ்த்தே கதைக்குள் அமைந்து கடவுளுக்குக் கடிதம் என்று தொடங்கும். கதையைப் படிக்கும் போது அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் கீழ்ச் சித்திரை வீதியும், கோட்டை வாசலும், கீழ் வாசலும் நம் கண் முன்னே தெரியும்.
கதையில் வரும் பாத்திரங்களின் பெயர் அவர்களின் கேரக்டரருக்குப் பொருத்தமாக இருக்கும். கோவிந்து பைத்தியம், ரங்கு, உள்ளூர் இன்டெலக்சுவல் ராவிரா, பணக்காரன் தாஸ், குண்டு ரமணி, கணக்கு வாத்தியார் விஜிஆர், பிரபந்தம் திண்ணா, வரதன், பாட்டி (நிஜக்கேரக்டர்), ஜீனியஸ் ரங்கநாதன் என்று ஒவ்வொரு பாத்திரத்திற்கும் முன்னோட்டம் அளித்திருக்கும் விதம் இன்னும் அருமை.
அதேபோல கதையை சஸ்பென்சாக முடித்திருக்கும் விதம், வாசகர்களின் கற்பனைக்குள் பொருந்துவதாகவும், அன்றைய நிலையில் அச்சமூகத்தில் பொதுவாக இருந்த நிகழ்ச்சிகள் குறித்து முற்றுப் பெறும். கதையின் முடிவு முன்பகுதியில் வந்த ஏதோ ஒரு நிகழ்ச்சியை அல்லது பொருளை தொடர்பிட்டு முடியும். உதாரணத்திற்கு,
~சின்ன `ரா` வின் முடிவில் வரும் - `செல்வம் இப்போதெல்லாம் படிக்கிறான்`, இதில் படிக்கிரான் – சின்ன ரா??~
~திண்ணாவின் சாதனையை `வீழ்ச்சி’ என்று என்னால் சொல்ல முடியவில்லை~
~மல்லிகா கோபாலனை கல்யாணம் பண்ணிக் கொண்டு அதே வீட்டில் அவள் அம்மாவைப் போல் நிற்கிறாள். அவர்கள் பெண் (மற்றொரு மல்லிகா) வாசலில் சிரித்துப் பேசிக் கொண்டே பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருக்கிறாள்~
அதே போல் குண்டு ரமணியின் பாத்திரத்தைப் போல் வரும் ஒருவரை நம் தெருவில் நிச்சயம் சந்தித்திருப்போம்.
ஒரு சில இடங்களில் நல்ல பன்ச் டயலாக் மறைந்திருக்கும். எடுத்துக்காட்டாக, `கோவிந்தின் அம்மா சக்கரத்தாழ்வாருக்கு இன்னும் நெய் ஊற்றிக்கொண்டுதான் இருக்கிறாள்’ என்று பைத்தியத்தை தெளிவிக்க தீபம் மட்டும் போதாது என்று கடவுளுக்குக் கடிதம் என்ற கதையை முடித்திருப்பார்.
~எனக்கு யார் மேலோ கோபம் வந்தது, ஒருவேளை ஸ்ரீரங்கத்து பெருமாள் பேரில் இருக்கலாம்~ என்று தன்னுள்ளிருக்கும் ஆதங்கத்தைச் சொல்லியிருப்பார்.
கிருஷ்ணசாமியின் டாமினென்ட் கேரக்டரை விவரிக்க, சரித்திரத்தில் சர்வாதிகள் பலரும் குள்ளமாக இருந்ததாகக் கேள்விப்பட்டிருப்பதாகக் கூறியிருப்பார்.
அதேபோல் அந்த வயதிற்குத் தோன்றும் கலர்புல்லான மசாலா எண்ணங்களை ஆங்காங்கே சிதறவிட்டிருக்கும் விதம் அவ்வயதைக் கடந்து வந்த அனைவராலும் தொடர்புபடுத்திக்கொள்ள இயலும் – வரதனுக்கு அவன் மாமா அனுப்பி வைத்ததாகச் சொல்லப்படும் பிரத்யோகப் படங்கள்! வீரசிம்மன் கதையில் திரை வழியாக சில்க் ஆசாமி கண்ணடித்த விதம், சிவராமன் வத்சலாவைப் பார்க்க வருவது, திருச்சி பார்பர் ஷாப்பில் இருக்கும் சீன அழகிகளின் போட்டோ, ஹரிதாஸ் படத்தில் வரும் வெட்டப்பட்டக் காட்சி என்று அந்த வயதில் தோன்றும் எண்ணங்களை பட்டியலிட்டிருப்பார்.
சில நேரங்களில் நண்பர்களின் மத்தியில் நாம் ஒப்புக்குச் சப்பாணியா நிற்பதையும், விளையாடும் போது நண்பர்களில் ஒருவன் அங்கிருக்கும் அனைவரையும் ஆதிக்கம் (டாமினேட்) செய்வதும், அதைக் கண்டு நாம் பொறாமைப் படுவது போன்ற இயல்பான விஷயங்களைச் சொல்லியிருக்கும் விதம் அருமை.
இக்கதையில் வரும் கதாபாத்திரங்களில் என்னை மிகவும் கவர்ந்தது அவர் பாட்டியின் கேர்க்டர் தான். சுஜாதா அவர்களின் சிறு வயதில் பெரும்பாலும் பாட்டியின் கண்காணிப்பில் வளர்ந்ததையும், பாட்டியின் கண்டிப்பையும் கதை முழுவதும் பார்க்க முடியும். தனியே அழைத்து வந்து தண்டிப்பதையும், பிறர் முன் தன்னை விட்டுக் கொடுக்காமல் பாட்டி பேசியதை மிக அழகாகக் கூறியிருப்பார்.
அதே போல சிறு வயதில் தான் செய்த தவறுகளில் ஒன்றான திருட்டு வேலையையும், அதனால் பின்னாளில் அவரடைந்த வலியையும் அதன் தொடர்ச்சியையும் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்திருப்பார்.
என் பார்வையில் ஒரு எழுத்தாளனின் வெற்றி என்பது புத்தகத்தை வாசிக்கும் வாசகர்களுக்கு, அதில் வரும் அடுத்த பக்கத்தைப் புரட்டும் ஆவல் முடிவில்லாமல் தொடர்ந்து வரவேண்டும்; மேலும் புத்தகத்தைப் படித்து முடித்த பிறகும் அதில் வரும் ஏதாவதொரு நிகழ்ச்சி அல்லது பாத்திரம் (கேரக்டர்) மனதில் நிலைக்க வேண்டும். சமுதாயத்திற்கு மெசேஜ் சொல்லுவதெல்லாம் அதற்குப் பிறகுதான்.
Priya sujatha
Pesum Bommaigal
Sujatha wrote like its kind of scientific come thriller novel and he done a wonderful job. He imagined these kinds of things before 30 years itself.
புதிதாக ஒரு ஆராய்ச்சிகூட பணியில் சேர்கிறாள் மாயா. அங்கே தான் அவளது அக்கா மேனகாவும் முன்னர் வேலை பார்த்தாள். அங்கு மர்மமான சம்பவங்களைக் காண்கிறாள் மாயா. ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து வீடு திரும்பும் மாயா, திடீரென்று மாயம் ஆகிவிடுகிறாள். அவளைக் கண்டுபிடிக்க வக்கீல் கணேஷ்-வசந்த்தை அணுகுகிறார் மாயாவின் காதலர் சுனில். மாயாவைக் கண்டறிந்தார்களா அந்த ஆராய்ச்சிக்கூடத்தின் மர்மம் என்ன என்று கணேஷ் வசந்த் இருவரும் கண்டு பிடிக்கிறார்கள்.
Pen Iyanthiram By Sujatha
| வகை | : | நாவல் (Novel) |
| எழுத்தாளர் | : | சுஜாதா (Sujatha) |
| பதிப்பகம் | : | உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam) |
| ISBN | : | 9788189912734 |
| Pages | : | 0 |
| பதிப்பு | : | 5 |
| Published Year | : | 2013 |
Pathi rajyam By Sujatha
| வகை | : | குறுநாவல் (KuruNovel) |
| எழுத்தாளர் | : | சுஜாதா (Sujatha) |
| பதிப்பகம் | : | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
| ISBN | : | 9788184936667 |
| Pages | : | 168 |
| பதிப்பு | : | 1 |
| Published Year | : | 2013 |
Pathavikaga Sujatha
It is the only political novel written by Sujatha and in Tamil fiction there are very few political novels and among them and it has good place to its compelling story and the relevance to the present politics in Tamil Nadu. I highly recommend this Padhavikaga novel for those who are interest in Politics.
|
1 2 3…20
Sujatha is one of the top Tamil literature writers. The book 1 2 3 ... 20 was written by Sujatha in 2011. Download the PDF copy of this book free from here. 1 2 3 ... 20 is a well-rated historical novel book in Tamil literature. The Thirumagal Nilayam published this genre book in 2011. This book contains only 215 pages. If you are interested, easily download this PDF book from here and enjoy your time.
1 2 3..20 Sujatha Novel free download in PDF format.
Sivantha Kaikal
| வகை | : | கதைகள் (Kathaigal - Tamil story) |
| எழுத்தாளர் | : | சுஜாதா (Sujatha) |
| பதிப்பகம் | : | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
| ISBN | : | 9788184934441 |
| Pages | : | 104 |
| பதிப்பு | : | 1 |
| Published Year | : | 2010 |









